கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கானல் நீராகிப்போன கட்டாய இலவசக் கல்வி

கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின் கீழ் நிரப்ப வேண்டிய 25% இடங்களுக்கான மனு கொடுக்க வேண்டிய தேதியை நீட்டி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய கல்வியாண்டு தொடங்குவதற்குப் பல மாதங்களுக்கு முன்பாகவே பல தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளிலுள்ள மழலையர் மற்றும் ஒன்றாம் வகுப்புக்கான இடங்களை நிரப்பிவிட்டன.

பிளஸ் 2 தேர்வு இணையதள முகவரிகள்

சென்னை: வரும் மே 9ல் வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவை மாணவர்கள் இணையதளம் மூலம்  எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், தேர்வுத் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது நான்கு இணையதளங்களில் தேர்வுத்துறை வெளியிடுகிறது;

விடுதலையின் பலனை அனுபவிப்பது யார் ? – சகாயம் ஐ ஏ எஸ் .

சென்னை: “தகவல் அறியும் உரிமைச் சட்டம்” குறித்த விழிப்புணர்வு நோக்கில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் ‘அங்குசம்’ திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கோ-ஆப்டெக்ஸ் இயக்குனர் சகாயம் ஐ.ஏ.எஸ், “சுதந்திரத்திற்காக பாடுபட்டோரின் குடும்பங்கள் ஆதரவற்று இருக்கும் நிலையில்  விடுதலையின் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பது  யார் ?” என கேள்வி எழுப்பினார்.

கோணுழாம்பள்ளம் மெயின் ரோடு பந்தநல்லூரார்வீடு M.சகாபுதீன் அவர்கள் மறைவு.

.                                            அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு பந்தநல்லூரார்வீடு M.ஜெகபர்அலி அவர்களின் சகோதரர் M.சகாபுதீன் அவர்கள் (25.04.2014 வெள்ளிக்கிழமை) இரவு 10.30 மணியளவில் தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹிராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம்( 26.04.2014 சனிக்கிழமை) பிற்பகல் 12.30 மணியளவில் நடைபெறும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது

828 மீட்டர் உயர துபாய் புர்ஜ் கலிபாவில் இருந்து பேஸ் ஜம்ப்: புதிய உலக சாதனை

828 மீட்டர் உயர துபாய் புர்ஜ் கலிபாவில் இருந்து பேஸ் ஜம்ப்: புதிய உலக சாதனைஉயரமான கட்டிடங்களில் இருந்து கீழே குதிப்பது ‘பேஸ் ஜம்ப்பிங்’ என்றழைக்கப்படுகிறது. ‘ஸ்கை டைவிங்’ போன்ற சாகச விளையாட்டாக கருதப்படும் இந்த முறையில் கீழே குதித்து சாதனை படைக்கும் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை துபாய் நகரில் நடைபெற்றது.

திற - குஜராத் கலவர சம்பவம் ஆவணப்படம்

                 

போடுங்கம்மா ஓட்டு பண்பாளரைப் பார்த்து !

நமது இந்திய திருநாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும், நாட்டை ஆளும் நன்மக்களைத் தேர்வு செய்ய வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்பழம்பெரும் நாட்டில் சமயத்தால், மொழியால், நிறத்தால், இனத்தால், கலாச்சாரத்தால், வேறுபட்டு மக்கள் பரவலாக வாழ்ந்தாலும், ஒரு தாய் மக்கள் போல் ஒருங்கிணைந்து வாழ்ந்து வருகிறோம்.

முஸ்லிம் பெண் காவலர் ஜனாஸாவை வழிமறிக்கும் காவலர்கள் (காணொளி)

 திண்டுக்கல் நத்தம் பகுதி கோட்டயூரைச் சேர்ந்த சகோதரி சர்மிளா பானு வயது 22 ,சென்னை சிறப்பு காவல் படையில் பணியில் இருந்த காவலரை கற்பழித்து கொலை செய்து காவல்துறையினர்

பின்னர் அந்த பெண்ணின் மீது பொய் குற்றச்சாட்டு கூறி அந்த பெண்ணின் சடலத்தையும் அவர் பெற்றோரிடம் ருபாய் 15000 கொடுத்து மிரட்டினர்

பின்னர் த.மு.மு.க களமிறங்கி அந்த பெண்ணின் உடலை 2 ஆம் முறையாக பிரோத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் போது காவல்துறையினர் வழிமறித்து சடலத்தை கைப்பற்ற வந்தனர்

உங்கள் பொன்னான வாக்குகள்!

இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது!.

பொன்னான வாக்கு-குறும்படம்

                 

தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் சீட்டு வழங்கும் பணியை கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைத்தார்.

வாக்காளர் சீட்டு வழங்கும் பணி நேற்றுகாலை தொடங்கியது. இந்த பணியை தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைத்து வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்காளர் சீட்டுகளை வழங்கினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஹஜ் செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு 21ல் குலுக்கல்!

சென்னை: ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களை தெரிவு செய்ய வரும் 21ஆம் தேதி சென்னையில் குலுக்கல் நடைபெறுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வாக்காளப் பெருமக்களே! சொல்வது எங்கள் கடமை! சொல்லிவிட்டோம்!

ஏப்ரல் 24 உங்கள் சுதந்திரத்தையும் உரிமையையும் நிர்ணயிக்கும் நாள். கையிலுள்ள வாக்குச்சீட்டு ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்திற்கும் விலைபோகின்ற கடைச்சரக்கு அல்ல! உங்களின் கருத்துச் சுதந்திரத்தை, நம்பிக்கைகளை, வாழ்வில் கடைப்பிடிக்கும் கோட்பாடுகளை, கற்கும் உரிமையை, கற்பிக்கும் அதிகாரத்தை, திருமணம், விவாகரத்து, பாகப்பிரிவினை போன்ற நடைமுறைகளை நீங்கள் விரும்பும் சட்டப்படி தொடர்ந்து மேற்கொள்வதை… இவற்றையெல்லாம் காத்து தக்கவைத்துக்கொள்வதற்கான துருப்புச்சீட்டே இந்த வாக்குச்சீட்டு.

ஆனால்..! ஆனால்…!! ஆனால்….!!!

உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.

மல்லிபட்டினம் கலவரம் – நேரடி ரிப்போர்ட் !

மீனவ கிராம பகுதியாகிய மல்லிபட்டினத்தில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அதிகமாக நல்லிணக்கத்துடன வாழ்ந்து வருகின்றனர். தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேதுபாவசத்திரம் ஒன்றியத்தின் கீழ்வரும் இந்த பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக பிஜேபி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கருப்பு (எ) முருகானந்தம் இன்று பகல் வருகை தந்துள்ளார். இவரோடு பிஜேபியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்கள் வாக்கு சேகரிக்க வந்து இருக்கின்றனர்.

நீயா ? நானா ?

                                                    அஸ்ஸலாமு அழைக்கும்
தற்போது இந்திய நாட்டின் அனைவரின் கவனமும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே இருக்கின்றதுநமது நாட்டின் நாளைய பிரதம மந்திரியார் ? நமது தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் யார் ? என்று பல கேள்விகளோடு நாம் அனைவரும் முக நூலில் ஒரு கருத்து யுத்தம் நடத்தி வருகின்றோம் .அதே சமயம் முக நூலில் ஒரு ஆரோக்கியமற்ற மோதல் நடந்து வருவது நமது சமுதாய மக்களுக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி நம்மை நாமே வீழ்த்துகின்றோம் .

2342 பணியிடங்களுக்கான VAO தேர்வு அறிவிப்பு .

தமிழ்நாட்டில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அதிகாரி பணியில் 2,342 காலி இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எழுத்துத் தேர்வை நடத்துகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணியில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அய்யா சொன்னது நீங்கள்தானா....? சொல்லுங்கள் அய்யா சொல்லுங்கள்....

1992ம் ஆண்டு புரட்சியாளர் பழனிபாபா அவர்கள் எழுதிய ஹிந்துஸ்தானத்திற்கு- ஹிந்துவுக்கு ஆபத்து!?!?!? என்ற நூலில் அய்யா மருத்துவர் ச.இராமதாஸ் அவர்கள் எழுதிய நூல் மதிப்புரை. காலத்தின் தேவை கருதி புரட்சியாளரின் பிள்ளைகள் இன்றைக்கு மறு வாசிப்பு செய்கிறோம்.

ஊழல், மதவாதத்தை தடுக்கவே தேர்தலில் போட்டி: எஸ்.டி.பி.ஐ.

சென்னை: நாட்டிலுள்ள ஊழல் மற்றும் மதவாதத்தை தடுக்கவே தேர்தலில் போட்டியிடுகிறோம் என எஸ்.டி.பி.ஐ. தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களமிறங்கியுள்ள  சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி (எஸ்.டி.பி.ஐ.),   இந்தியா முழுவதும் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

கோணுழாம்பள்ளத்தில் குரங்குகளின் அட்டகாசம்.

கோணுழாம்பள்ளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வலம் வந்து கொண்டிருந்த குரங்குகள் தற்பொழுது கூட்டம் கூட்டமாக ஊரின்  ஒவ்வொரு பகுதியிலும் சுற்றித் திரிந்து மரங்களில் இருக்கும் காய்களையும், வீட்டு மாடி மற்றும் திறந்த  வெளி பகுதிகளில் காய வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பண்டங்களையும் நாசம் செய்து வருவது வாடிக்கையாகி விட்டது.