கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வெள்ள கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்

தஞ்சாவூர்,தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வெள்ள கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ளப்பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.

கோணுழாம்பள்ளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் ஜனவரி 28 போராட்ட விளம்பர பேனர் வாசகம்

முஸ்லீம்ஸ் ஏமாத்திடுவாங்க.

வீட்டின் முன்புறமாக கற்கள் ஒட்ட வேண்டிய வேலை ஒன்றிருந்தது. சில வீடுகளின் முன்பாக கருங்கற்களை வரிசையாக ஒட்டியிருப்பதை கவனித்திருப்பீர்கள். அந்த வேலைதான். கற்களை வெட்டுவதிலிருந்து நேர்த்தியாக ஒட்டுவது வரைக்கும் முஸ்லீம்கள்தான் இந்த வேலையை கச்சிதமாகச் செய்வார்கள் என்று சொன்னார்கள்.

பேராசை

இறைத்தூதர் அவர்களிடம்  நான் (நிதியுதவி) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் (நிதியுதவி)  கேட்டேன். அப்போதும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், ‘ஹகீமே!  இச்செல்வம் (பார்க்கப்) பசுமையானதும் (சுவைக்க) இனிப்பானதும் ஆகும்.

T.சாகுல்ஹமீது-T.ரெஜீனா பர்வீன் திருமணம்.

பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு செல்லத் தடை!

பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் செல்போன் கொண்டு செல்ல தமிழக கல்வித்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தற்போது மாணவ- மாணவிகள் அதிக அளவு செல்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால், அவர்களின் கவனம் வேறுவிதமாக சென்று வாழ்க்கையை வீணாகும் அளவுக்கு போய்விடுகிறது.

உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை!

 செப்டம்பர்  14 உலக முதலுதவி தினம்!
இந்தியாவில் விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகிதம் பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகிறார்கள்.

இத்தகைய விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான முதலுதவி கிடைத்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு முதலுதவி என்பது தேவையானதாகவும், அவசியமாகவும் இருக்கின்றது.

இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும் ....எச்சரிக்கைச் செய்தி.

முழுவதும் படித்துவிட்டு மற்றவர்களுக்குப் பகிரவும்..எனக்குத் தெரிந்த நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது..Internetல் எல்லா தளங்களுக்கும் செல்பவர்..ஒருநாள், அத்தளத்தில் 'அழகான தமிழ்ப் பெண்கள்'என்ற தலைப்பில் இருந்த பகுதியைத் திறந்து பார்த்திருக்கிறார்..நான்கைந்து பக்கங்களைப் பார்வையிட்டவருக்கு ஆறாவது பக்கத்தில் காத்திருந்தது பேரதிர்ச்சி...ஆம்...!

சிறுபான்மையினர் எதிர்ப்பில்... அன்று பட்டேல் இன்று மோடி

வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கப்பட இருக்கிறது. இனிமேல் இதுதான் உலகிலேயே மிக உயரமான சிலையாக இருக்கப்போகிறது. சிலை வைக்கப்போவதாக அறிவித்துள்ளவர் யார் தெரியுமா?

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான்.

ஷைத்தானின் ஊசலாட்டம்...

நிலையாய் இருப்பவன், பிறப்பு, இறப்பு  பசி, தூக்கம், தேவை, மற்றும் சந்ததிக்கு அப்பாற்பட்ட தூய இறைவன் முதன் முதலாக மண்ணிலிருந்து மனிதனை ( ஆதம் நபியை ) படைத்தான். மேலும் சுவனத்து இன்பங்களை அனுபவிக்கச் சொல்லி, ஆறறிவையும் கொடுத்து பலகீனம் என்னும் ஒரு யதார்த்தமான ஒன்றையும் கூடவே கொடுத்து, ஷைத்தான், மலாயிக்கத், என இரண்டு தூண்டுதல்களையும் கொடுத்து சோதனை செய்தான்.

M.முஹம்மது ரியாஸ்-தஸ்லீம் பர்வீன்,திருமணம்

=======================================================================
மணமகன்:  M.முகம்மது ரியாஸ்.            மணமகள்:R.தஸ்லீம் பர்வீன்,
           S/O.R.முகம்மது இக்பால்,.                                 D/O.A.M.ரஹ்மத்துல்லாஹ்,
========================================================================
                                  இடம்:கோணுழாம்பள்ளம்,ஜாமிஆ மஸ்ஜித்.
                                                             நாள் :12.09.2013
========================================================================
 பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்.
========================================================================

வக்ஃப் சொத்துகளை அபகரிப்பது ஜாமீன் இல்லா குற்றம்! – திருத்த மசோதாவை மக்களவை அங்கீகரித்தது!

புதுடெல்லி: வக்ஃப் சொத்துகளை பாதுகாப்பதற்கும், வளர்ச்சிக்குமான வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

முன்னர் இம்மசோதாவை மாநிலங்களை அங்கீகரித்திருந்தது. குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டால் இம்மசோதா அமலுக்கு வரும். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கான் தாக்கல் செய்த மசோதாவை பா.ஜ.க., இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் ஆதரித்தனர்.

இப்படியும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்!!

படத்தை பார்த்ததும் பட ஹீரோ என்று என்ன தோன்றுகிறதல்லவா ஆம்! இவர் ஒரு அரசியல் ஹீரோ.

நாஜிம், காரைக்கால் தெற்கு தொகுதியில் தொடர்ந்து 25 வருடங்களாக தோல்வியே இல்லாத திமுக சட்ட மன்ற உறுப்பினர். 

எதிர்மறைச் சூழலிலும் நேர்மையாய் இருப்போம்.

எதிர்மறைச் சூழலை மிக நுட்பமாய் முறியடிக்கும் வழி நாம் நேர்மறையாய் (positive) நடந்துகொள்வது தான்.எல்லா நேரங்களிலும் நம்முடைய சூழல் நாம் விரும்புவது போல் அமைந்துவிடுவதில்லை. பல நேரங்களில் எதிர்பாராமலே நாம் எதிர்மறைச் சூழலில் சிக்கிக் கொள்கிறோம்.

கண்ணியமிக்க காயிதே மில்லத்

கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களைப் போன்ற ஒரு தலைவர் தமிழ்மண்ணில் பிறந்தது நம் கண் முன்னே வாழ்ந்து மறைந்த காட்சிகளைக் காண நாம் பாக்கியம் செய்தவர்கள். இன்றைய இளைய சமுதாயத்தினர் நம்பி பின் தொடர்ந்து போகும் பல மாறுபட்ட இயக்கங்களின் தலைவர்கள் இத்தகைய தகுதிகளைப் பெற்று இருப்பார்களா என்பது பெரும் சந்தேகத்துக்குரியது. காயிதே மில்லத் அவர்களைப் பற்றி இன்னும் இரண்டொரு செய்திகளை சுட்டிக் காட்டிவிட்டு தொடர எண்ணுகிறேன்.

அண்ணா பிறந்த நாள்: முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடிவு பிறக்குமா?

“இந்தியாவில் வாழும் முஸ்லிமாக இருந்தால் நீங்கள் சிறையில் இருக்கும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம். ஆளுங்கட்சி மதச்சார்பற்றது என்பது கூட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தரவில்லை.” (இந்தியா டுடே வார இதழின் களஆய்வு அறிக்கை, டிசம்பர் 26, 2012)

இந்தியாவில் இன்று முஸ்லிம்களின் வாழ்வு நிலை மிகப் பெரும் போராட்டத்தின் ஊற்றாக மாறிக் கொண்டிருக்கின்றது. ஆம்! சுதந்திரத்திற்காக எவ்வளவோ தியாகங்கள் செய்து, ஆங்கிலேயர்களை விரட்டியடித்த ஒரு சமுதாயம் இன்று குற்றப் பின்னணியோடு வாழ்ந்து வருகிறது.