கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

புனித ஹஜ் பயணிகளுக்கு 8மாத கால பாஸ்போர்ட் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.,க்கு இந்திய வெளிவிவகாரத்துறை பதில்

இந்திய வெளிவிவகார அமைச் சகம் வகுத்துள்ள காலவரைய ரைக்குள் போலீஸ் விசாரணை அறிக்கை கிடைப்பதில் காலதாம தம் ஏற்பட்டால் சவூதி அரேபியா விற்கு மட்டும் பயணிக்கும் வகை யில் 8 மாத கால அவகாசம் கொண்ட பாஸ்போர்ட்களை புனித ஹஜ் பயணிகளுக்கு வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.


இப்பிரச்சினையை நாடாளு மன்றத்தில் எழுப்பிய அப்துல் ரஹ்மான் எம்.பி.,க்கு இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் பெஸன்ட் கே. குப்தா இது குறித்து எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பேச்சு

புனித ஹஜ் பயணிகளுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதில் ஏற் படும் தாமதமும், அதனால் சவூதி அரேபியாவில் விசா பெற முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு பாதிப்புக்கள் உள்ளாகும் சூழ் நிலை குறித்து கடந்த மார்ச் 26ம் தேதி நாடாளுமன்ற மக்கள வையில் விதி 377ன் கீழ் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து பேசினார்.

அதனைத் தொடர்ந்து மத்திய வெளிவிவகாரத்துறை கூடுதல் செயலாளரை நேரில் சந்தித்து இதுபற்றி எடுத்துக் கூறி உடனடி பரிகாரம் காணவும் வலியுறுத்தினார்.

எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.,யின் கோரிக்கையை ஏற்ற இந்திய வெளிவிவாகர அமைச்சகம், புனித ஹஜ் பயணி கள் பாஸ்போர்ட் விவகாரம் குறித்து முடிவெடுத்துள்ளது.

வெளிவிவாரத்துறை பதில் கடிதம்

இது பற்றி இந்திய வெளி விவகாரத் துறை அமைச்ச கத்தின் கூடுதல் செயலாளர் பெஸன்ட் கே. குப்தா எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.,க்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப் பிட்டுள்ளதாவது:

புனித ஹஜ்ஜுக்குச் செல் வோருக்கான பாஸ்போர்ட் வழங் கும் சம்மந்தமாக கீழே கையெ ழுத்திட்டுள்ள அதிகாரியுடன் சந்திப்பு நிகழ்த்தி பேசியுள்ளீர் கள்.

பிரத்யேக ஏற்பாடு

ஹஜ் பயணிகளுக்கு பாஸ் போர்ட் வழங்குவதில் பிரத்தி யேக ஏற்பாட்டினைச் செய்திருக் கிறோம். போலீஸ் விசாரணை முடிவுற்ற பிறகு முழுமையான கால அவகாசம் கொண்ட பாஸ் போர்ட்டுகளை ஹஜ் பயணி களுக்கு முன்னுரிமை கொடுக் கப்பட்ட நிலையில் வழங்கிட வேண்டும் என்று அனைத்து பிராந்திய பாஸ்போர்ட் அலுவல கங்களுக்கும் அறிவுறுத்தப்பட் டுள்ளது.

அமைச்சகம் வகுத்துள்ள காலவரையரைக்குள் போலீஸ் விசாரனை அறிக்கை கிடைப் பதில் தாமதம் ஏற்பட்டால் சவூதி அரேபியாவுக்கு மட்டும் பயணிக்கும் வகையிலான 8 மாத அவகாசம் கொண்ட பாஸ் போர்ட்டுகளை ஹஜ் பயணி களுக்கு வழங்கலாம், அதற்கு முறையான சரிபார்த்தலைக் கடை பிடிக்க வேண்டும்.

பாஸ்போர்ட் விண்ணப்ப படிவத்தைக் குறித்துக்காட்டி ஹஜ் கமிட்டியால் வழங்கப்பட் டிருக்கும் கவர் எண் பதியப்பட் டுள்ள மனுதாரரின் பெயருக்கு வந்த கடிதத்தைக் கொடுக்க வேண்டும். பாஸ்போர்ட் அலுவ லக அதிகாரிகள் அதனை சரிபார்ப்பார்கள்.

கூடுதல் கவுண்டர்கள்

ஹஜ் பயணிகள் அதிகமாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப் பிக்கும் நிலையில் அக்கூட் டத்தை சமாளிக்க பிரத்தியேக கவுண்டர்களைத் திறந்து வைக்க பாஸ்போர்ட் அலுவல கங்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. இதற்கு மாநில ஹஜ் கமிட்டியின் அங்கீகாரம் தரப் பட்ட ஊழியர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.

அனைத்து பாஸ்போர்ட் அலு வலகங்களும் தகுதிவாய்ந்த அதிகாரிகளை நியமித்து ஹஜ் பயணிகளுக்கான பாஸ்போர்ட் களை உரிய காலத்திற்குள் வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.,க்கு இந்திய வெளிவிவகாரத்துறை அனுப்பி யுள்ள கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 கருத்துகள்: