கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே?

 
டாக்டர் ஏ.பீ.முஹம்மது அலீ, பிஎச்.டி, ஐ.பீ.எஸ் (ஓ)
[ இந்திய நாட்டினை 500 ஆண்டுகள் ஆண்ட சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம், இந்திய சுதந்திர வரலாற்றில் பல விழுப்புண்களைத் தழுவிய சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம், சுதந்திர இந்தியாவின் கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முக்கிய பங்காற்றிய சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம், கண்ணிய மிகு காயிதே மில்லத் போன்ற அப்பழுக்கற்ற ஜனநாயக வாதிகள் நிறைந்த சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம், விஞ்ஞான முன்னேற்றத்தில் அப்துல் கலாம் போன்ற அறிஞர்களை பெற்ற சமுதாம் நமது சமுதாயம்,




ஆட்சியில் மிகவும் பவர்ஃபுல் இலாக்கலான ரெவின்யூ, பொதுத்துறை போன்ற இலாக்கள் தன்னிடமே வைத்திருந்தாலும் கடைசி வரை சொந்த வீடு இல்லாமல் இன்று இடிக்கப்படும் அந்த பழைய சென்னை பட்டிணப்பாக்கம் அரசு குடியிருப்பில் தான் சாகும் வரை வாழ்ந்த சாதிக் பாட்சா போன்றவர்கள் வாழ்ந்த சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம்.

ஆனால் இன்று பதவியில்லாவிட்டாலும் சொகுசு கார்களில் பவனி வந்து தங்கள் பங்களாக்களில் குடியிருந்து தங்கள் குடும்ப சொத்தாக கட்சியினையும் முஸ்லிம் சமூக இயக்கங்களையும் தலைவர்கள் தன்னலத்துடன் இயக்கிக் கொண்டிருப்பதால் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டு வருகின்றது என்பதினை சமீப கால நடவடிக்கைகள் காட்டுகின்றன.]
ஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே?

 பேட்டை முதலாளி என்று செல்லமாக அழைக்கப்பட்ட தோல் வியாபாரத்தில் கொடிகட்டிப் பிறந்த கண்ணிய மிகு காயிதே மில்லத் தனது உடல், பொருள், ஆவி அத்தனையும் இஸ்லாமிய சமூகத்திற்காக அர்ப்பணித்து தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவிலும் தலை நிமிர்ந்து நிற்க வைத்த பெருமை படைத்த அப்பழுக்கற்ற அரசியல் வாதிமட்டுமல்ல நாடடுப்பற்று மிக்க புகழ் மிக்கவர். தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி, பகுத்தறிவு பகலவன் பெரியார், எழைப்பங்காளன் காமராஜர் போன்றவர்களுடன் இணையாகப் பேசப்பட்டவர் காயிதே மில்லத் அவர்கள். 1967 ஆம் ஆண்டு நான் புதுக்கல்லூரி மாணவனாக இருந்தபோது பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் பொருப்பினை ஏற்ற போது குரோம்பேட்டை வீடு தேடிச்சென்று வாழ்த்துப் பெரும் அளவிற்கு உயர்ந்தவர் காயிதே மில்லத். தனது நீண்ட மேலாடையில்(ஓவர்கோட்) மெலிந்த உருவமானாலும் உயர்நது விளங்கினாரர்.

அவருக்கு பீர் பீர் முஹம்மது, இலக்கியச் செல்வன் லத்தீப், முகவை எஸ்.எம். ஷரீஃப், வந்தவாசி வஹ்ஹாப், பத்திரிக்கையாளர் திருச்சி யூஸூஃப், கொள்கைச் செம்மல் ஏ.கே. சமது, இளைஞர் சிங்கம் செஙகம் அப்துல் ஜப்பார் போன்றவர்கள் இருந்ததால் இந்திய பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்தன்மையுடன் இரட்டைப்படையில் பதவி வகித்து இஸ்லாமிய குரலினை ஒலிக்கச் செய்தது. ஆனால் இன்று தங்கள் கட்சியினை அங்கீகாரம் பெற முடியாத அளவிற்கு தாவூத் மியாகான் கட்சி சவால் விடடும், தி.மு.க கட்சியின் பின்னால் ஒளிந்து கொள்ளும் அளவிற்கு தேய்து விட்டது பரிதாபமாக இல்லையா தோழர்களே?
சமீபத்தில் கள் இறக்க போராட்டம் நடத்திய, மற்றும் மேற்கு பகுதியில் மட்டும் பெரும்பான்மை சமூகமாக உள்ள கொங்கு வேளாளர் கட்சி கூட 2011 தேர்தலில் போட்டி போட ஏழு இடங்கள் பெற்று விட்டது. வட மாவட்டங்களில் மட்டும் பெரும்பான்மை சமூகத்தினை வைத்திருக்கும் பா.ம.க மற்றும் விடுதலை சிறுத்தைக் கட்சி 31 இடங்கள் மற்றும் 10 இடங்கள் சட்டமன்றத்தில் போட்டிபோட இடங்கள் பெற்று விட்டன. ஆனால் தமிழகத்தில் ஏழு சதவீத முஸ்லிம்கள் தமிழகமெங்கும் பரவலாக இருந்து தி.மு.க மற்றும் அதிமுக கூட்டணியில் போட்டி போட வெறும் இரண்டு மூன்று தொகுதிகள் பெற்று முஸ்லிம் லீக் கட்சியும், த.மு.மு.க வின் மனித நேய கட்சியும் பெற்று இளைத்திருப்பதிற்கு யார் காரணம் சகோதரர்களே?
சரி தலா மூன்று தொகுதியில் போட்டி போடும் வோட்பாளர்கள் 5 பேரும் வெற்றி பெற்று விடுவார்களா என்றால் சந்தேகமே! காரணம், அந்தத் தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.கவும். அதிமுகவும் போட்டியிட ஒதுக்கும் இடங்கள் இரு முஸ்லிம் கட்சிகளின் வோட்பாளர்களை எதிர்க்கும் இடங்களாக இருக்கும். ஆகவே கடைசியில் மிஞ்சியது இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள் இப்போது இருப்பது போலத்தான் இருக்கும் என்றால் மிகையாகாது.
ஒரு நாட்டில் தேர்தல் நடக்கும் போது அதன் கொள்கைகளை அந்தந்த கட்சி வெளியிட வேண்டும். அது போன்ற கொள்கை பட்டியலில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத ஒதுக்கீடு வேண்டும் என்றும், இது வரை 3.5 சதவீத ஒதுக்கீட்டில் பயணடைந்த முஸ்லிம்களின் பட்டியலினை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென்றும், முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் முன்னேற பிரதமரின் 15அம்ச சிறப்பு கொள்கையின் படி முஸ்லிம்களுக்கு தனி தொழில் பேட்டைகள் ஆரம்பிக்குமாறும், ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃப் சொத்துக்கள், மற்றும் கணக்கில் வராத தர்காச் சொத்துக்கள் கைப்பற்றப்படும் என்றும், அறிக்கை வெளியிட அந்தக் கட்சியினால் முடியுமா? முடியாது. காரணம், முஸ்லிம் லீக் தனிச் சின்னத்தில் போட்டியிட முடியாமல் தி.மு.கச் சின்னத்தில் தான் போட்டியிட முடியும்.
தமுமுகவின் மனித நேயக் கட்சியின் பிரதான அதிமுக நான் மேலேக் குறிப்பிட்ட முஸ்லிம் நல கொள்கைகளுக்கு எதிரானது என்பதால் அந்த கொள்கை விளக்கமும் வெளியிட முடியாது.
ஒரு சமுதாய கட்சியினை நடத்துகிறவர்கள் அந்த சமுதாயம் மேன்பட அரசியல் வாதிகளாக மட்டுமல்லாது அந்த சமுதாயத்தினை மேன்படுத்த முற்போக்கு திட்டங்களை செயல் படுத்து செயல் தலைவர்களாக இருக்க வேண்டும். அதாவது ஆங்கிலத்தில் பொலிட்டிஸியனாக அல்லாது ஸ்டேட்ஸ்மேன்களாக இருக்க வேண்டும். சமுதாய இயக்கங்களை அரசியல் கட்சிகள் தங்கள் இஸ்டம் போல ஆட்டிப்படைக்கவும், கருவேப்பில்லையாக கருதவும் அனுமதிக்கலாமா?
நமது சமுதாயத்திற்கு என்று ஒரு எம்.பி அதுவும் தி.மு.க எம்.பியாகத்தான் இருக்கிறார். இப்போது மத்திய அரசியலிருந்து தி.மு.க விலகி விட்டது. கொள்கை அளவில் மத்திய அரசிற்கு ஆதரவு கொடுப்போமென்றும் கூறிவிட்டது. இந்த நிலையில் அந்த தி.மு.கவிலுள்ள முஸ்லிம் எம்.பியின் நிலையென்ன? அவரும் கொள்கை அடிப்படையில் ஆதரவு கொடுப்பாரா? ஏனென்றால் முஸ்லிம் லீக்கின் கேரள எம்.பியும் அதன் தலைவருமான ஒரு அமைச்சர் மத்தியில் அங்கம் வகிப்பதினால் அது போன்ற ஒரு முடிவினை தமிழக எம்.பி எடுக்க முடியுமா? அல்லது தமிழக முஸ்லிம் லீக் தான் அந்த முடிவினை எடுக்குமா? போன்ற கேள்விகள் முஸ்லிம்கள் மத்தியில் எழும்பிக் கொண்டுதான் உள்ளது. முஸ்லிம் லீக் தனிக் கட்சியாக விளங்குமானால் இது போன்ற தர்ம சங்கடமான நிலை அந்தக் கட்சிக்கு வரப் போவதில்லையல்லவா?
சென்னையில் ஜனவரி மாதத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் தமிழக முதல்வர் அவர்கள் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடினை ஐந்து சதவீதமாக உயர்த்துவதிற்கு அவர்கள் சேர்ந்து கோரிக்கையினை வைத்தால் அது பற்றி அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் முஸ்லிம் கட்சிகளும், சமுதாய இயக்கங்களும் இந்த சந்தர்ப்பத்தினைப் பயன் படுத்தி திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர கலந்து ஆலோசனை செய்தது போன்று ஓருமித்த முடிவினை எடுத்து அவரிடம் தெரிவித்து அதற்கான ஆணையினை தேர்தல் அறிவிப்பு வரு முன்பே எடுக்கவில்லையே ஏன் என்ற கேள்வி என் போன்றோர் மனதில் எழாமல் இல்லை. அதற்குள்ளாக யார் யாரோ அந்த அறிவிப்பு தங்கள் கோரிக்கையினால் தான் வந்தது என்று தம்பட்டம் அடித்து அறிக்கையும், நோட்டீசும் வீதி தோறும் ஒட்டப்பட்டது ஏன் என்று தெரியவில்லை?
தேர்தலும் அறிவிப்பும் வந்து விட்டது. ஆகவே அப்படி நோட்டீஸ் அடித்தவர்கள் தாங்கள் ஏமாந்து விட்போமே என்று தாங்கள் யாருக்கும் ஓட்டுப் போடப் போவதில்லை என்ற முடிவினை விதி49வினை உபயோகிக்கப் போவதாக இணைய தள செய்திகள் சொல்லியுள்ளன. ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் கருத்துக்களை தைரியமாக சொல்லி தங்கள் சமுதாயத்திற்கு யார் சிறப்பாக சேவை செய்வார்கள் என்று தேர்ந்தெடுக்கும் முடிவினை ஒவ்வொரு குடி மகனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் தேர்தலினை புறக்கணிக்கும் செயல் ஜனநாயக விரேத செயலாக கருத வேண்டும்.
ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரினை உள்ளடக்கிய நியூ சவுத் வேல்ஸ் மாநில தேர்தல் வரும் மார்ச் 26ந்தேதி நடக்கின்றது. அதில் என்ன விசேசம் என்றால் மக்கள் கட்டாயமாக ஓட்டுப் போட வேண்டும். அப்படிப் போடவில்லையென்றால் அது தண்டனைக்குறிய செயலாக கருதுகிறார்கள். அப்படி இருக்கும் போது விதி 49வினை நமது சமுதாய அமைப்புகள் தேர்ந்தெடுப்பது சரியான செயலாக கருத முடியாது.
இந்திய நாட்டினை 500 ஆண்டுகள் ஆண்ட சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம், இந்திய சுதந்திர வரலாற்றில் பல விழுப்புண்களைத் தழுவிய சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம், சுதந்திர இந்தியாவின் கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முக்கிய பங்காற்றிய சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம், கண்ணிய மிகு காயிதே மில்லத் போன்ற அப்பழுக்கற்ற ஜனநாயக வாதிகள் நிறைந்த சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம், விஞ்ஞான முன்னேற்றத்தில் அப்துல் கலாம் போன்ற அறிஞர்களை பெற்ற சமுதாம் நமது சமுதாயம், ஆட்சியில் மிகவும் பவர்ஃபுல் இலாக்கலான ரெவின்யூ, பொதுத்துறை போன்ற இலாக்கள் தன்னிடமே வைத்திருந்தாலும் கடைசி வரை சொந்த வீடு இல்லாமல் இன்று இடிக்கப்படும் அந்த பழைய சென்னை பட்டிணப்பாக்கம் அரசு குடியிருப்பில் தான் சாகும் வரை வாழ்ந்த சாதிக் பாட்சா போன்றவர்கள் வாழ்ந்த சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம்.
ஆனால் இன்று,
பதவியில்லாவிட்டாலும் சொகுசு கார்களில் பவனி வந்து தங்கள் பங்களாக்களில் குடியிருந்து தங்கள் குடும்ப சொத்தாக கட்சியினையும் முஸ்லிம் சமூக இயக்கங்களையும் தலைவர்கள் தன்னலத்துடன் இயக்கிக் கொண்டிருப்பதால் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டு வருகின்றது என்பதினை சமீப கால நடவடிக்கைகள் காட்டுகின்றன. அந்த சமூகத்தினை தட்டியெழுப்பி தனது எழுச்சியினை படித்த இளைய இஸ்லாமிய சமுதாயம் வழி நடத்திச் செல்லுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் சரியாகுமா சொந்தங்களே!

0 கருத்துகள்: